இஸ்ரேல் படைகளால் காசாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை!

You are currently viewing இஸ்ரேல் படைகளால் காசாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை!

தண்ணீர் இல்லாததால் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது என பாலஸ்தீனத்தின் குடிமகன் அந்த நாட்டு ஊடகம் ஒன்றில் குறிப்ப்பிட்ட்டுள்ளார். இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 10வது நாளாக நீடித்து வருகிறது. ஹாமஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் குடி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை தடை செய்தனர்.

இதனால் பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் குடிக்க, குளிக்க, அத்தியாவசியத் தேவைகளுக்காக தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவின் தெற்கே உள்ள ரஃபா எல்லையில் உள்ள 7 குழந்தைகளின் தாய் மற்றும் 23 வயது பெண்மணியான அகமது ஹமீது தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விளக்கியுள்ளார்.

அதில், “நான் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது. கழிவறை செல்வது கூட கடினமாக உள்ளது, தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

கடைகளில் எந்தவொரு பொருட்களும் இல்லை. அப்படியே ஓரிரு இடங்களில் ஏதாவது பொருட்கள் கிடைக்கின்றன, அவ்வாறு கிடைத்தாலும் விலை உச்சத்தில் இருக்கிறது.

கடைகளில் கொஞ்சம் சீஸ் துண்டுகள், டூனா மீன் கேன்களும் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழ்நிலையை மிகுந்த கடுமையாக உணர்கிறேன். ஏதும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்” என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை

தாக்குதலுக்கு உள்ளாகும் காசாவில் இருந்து இதுவரை 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போரானது 10 வது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகரை முற்றிலும் உருகுலைத்து வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments