ஈழ உணர்வாளரும் நகைச்சுவை நடிகரும் நல்ல மனிதருமாகிய மயிலுச்சாமி காலமானார்.

You are currently viewing ஈழ உணர்வாளரும் நகைச்சுவை நடிகரும் நல்ல மனிதருமாகிய மயிலுச்சாமி காலமானார்.

ஈழ உணர்வாளரும் நகைச்சுவை நடிகரும் நல்ல மனிதருமாகிய மயிலுச்சாமி அவர்கள் தனது 57வது அகவையில் இன்று காலமானார்.

தென்னிந்திய பொழுதுபோக்குத் துறையில் பிரபலமான மற்றும் மூத்த நபரான இவர், தன் வாழ்வை ஒரு பலகுரல் கலைஞராக துவக்கினார். இவர் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மயில்சாமி ஒரு புகழ்பெற்ற மேடைக் கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர், சுருக்கமாக சொல்வதானால் இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு பன்முக ஆளுமையாக இருந்தார். மயில்சாமி தனது சிறுவயதிலிருந்தே பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றார். உள்ளூரில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments