கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து போராளிகளின் இலக்கத் தகடுகள் சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன !

You are currently viewing கொக்குத்  தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து போராளிகளின் இலக்கத் தகடுகள் சயனைட் குப்பி  என்பன மீட்கப்பட்டுள்ளன !

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று( 13.09.2023) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப் பட்ட மனித எச்சங்களுடன் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் அணியும் இலக்கத் தகடுகளும்,ஒரு சயனைட் குப்பியும் மீட்கப் பட்டுள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நேற்று [ஏழாவது ] நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளிடன் இதுவரை (ஏழு) மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

இதேநேரம் நேற்று முன்நாள் (12.09.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது ரஷ்ய தயாரிப்பான தூய நீரைச் சுத்திகரித்து நன் நீராக்கிப் பருகுவதற்குப் பயன்படுத்தும் கருவி ஒன்றும் மீட்கப் பட்டிருந்ததுடன் மனித எச்சத்தின் பகுதி ஒன்றும் மீட்கப் பட்டிருந்தன.

இதே வேளை இவை இறுதிப் போரின்போது சிறீலங்கா படைகளிடம் உறவுகளால் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளின் மனித எச்சங்கள் என உறுதிப் படுத்தப்படுவதாக இந்தப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட பலரும் கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து போராளிகளின் இலக்கத் தகடுகள் சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன ! 1

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து போராளிகளின் இலக்கத் தகடுகள் சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன ! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments