கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை!

You are currently viewing கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை!

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. அங்கு 100 வீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இது குறித்து இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நேற்று மாலை 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் 18 பேரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள். 

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமை ப்படுத்திலிருந்து அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மேலதிகசிகிச்சைக்காக கோப்பாய் விசேட சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். 

மேலும் கோப்பாய் பிரதேசத்தில் உள்ள மக்கள் பீதி அடையத் தேவையில்லை ஏனெனில் நோயாளர்கள் சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்களிடமிருந்து வெளியேறும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டு தெல்லிப்பளையில் எரியூட்டப்படுகிறது.

எனவே சமுதாயத்திற்கோ அல்லது அப்பகுதி மக்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக யாழ். போதனாவைத்தியசாலை வைத்தியர்கள் பலர் மிக அவதானமான முறையில் அவர்கள் சுய பாதுகாப்பு அங்கிகள் அணிந்து சேவையை வழங்கி வருகின்றார்கள். 

பகிர்ந்துகொள்ள