சாணக்கியன் தமிழரை காட்டிக்கொடுத்தவர்!

You are currently viewing சாணக்கியன் தமிழரை காட்டிக்கொடுத்தவர்!

தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கைக்கூலியே சாணக்கியன் எம்.பியாவார் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம் ஹரிஸ் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஹரில் எம்.பி., சாணக்கியன்மீது இவ்வாறு சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார்.

” தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு சமூகமாக காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும்கூட இணைந்து பயணித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுகளின் அடிப்படையில் சில தீர்மானங்களை எடுத்ததால் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனங்களைக்கூட சந்தித்துள்ளது.

நிலைமை இப்படி இருக்கையில் காட்டிக்கொடுக்கின்றோம் என சாணக்கியன் விமர்சித்துள்ளார். நாம் காட்டிக்கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கவில்லை. சாணக்கியன் என்பவர்தான் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர். அவர் பிள்ளையானின் கைக்கூலி, சுதந்திரக்கட்சியின் கைக்கூலியாவார்.” – எனவும் ஹரிஸ் எம்.பி. விளாசித் தள்ளினார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments