சிறீலங்காவில் கொரோனாத் தொற்று எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது!

You are currently viewing சிறீலங்காவில் கொரோனாத் தொற்று எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது!

இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சிறீலங்காவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 16,309 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 395 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, சிறீலங்காவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 546,498 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments