தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 10 ம்நாள்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 10 ம்நாள்!

 

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு  தமிழீழ  விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின்  10 ம்நாள் – காணொளி

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் நாட்டினைக் கடந்து யேர்மனி நாட்டினூடாக பயணத்தை மேற்கொண்டு,டில்லிங்கன்,சார்புறூக்கன் நகரங்களைக் கடந்து லண்டோ மாநகரில் நிறைபெற்றிருந்தது.

இன்று காலை (08.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் லண்டோ நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டதோடு,தொடரும் தமிழின அழிப்பு சார்ந்த மனு கையளிப்பும் நடைபெற்றது.

இன்று 10ம் நாள்(09.09.2023) பிரான்சை வந்தடைந்து போராட்டம் நீதிக்காக பயணித்து வருகின்றது.

அனைத்துல குமுகாயத்தின் கதவுகளைத்தட்டிட,தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள் கடுமையான வெப்பக்காலநிலைக்கு மத்தியிலும் கடும்சவால்களுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணத்தை தொடர்ந்தவண்ணமுள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும்

நீதிகேட்டும் தமிழீழமே எமக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் அறவழியில் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அன்புடன் வரவேற்று,தமிழர்கள் என்ற உணர்வுடன் இறுகப்பற்றி,இணைந்து பயணிக்க அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி, பிரான்சு, சுவிஸ் ஊடாகப் பயணித்து 18.09.2023 அன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துடன் இணையவுள்ளது .இப்போராட்டத்தில் இனமான உணர்வுடன் அனைத்து உறவுகளும் இணைந்து ஒரணியில் உரிமைக்குரல் எழுப்பிடுவோம்.

வாருங்கள்…

“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்” 

– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments