தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு 5 பொது அமைப்புகள் வெளிப்படையிலான ஆதரவு!!

You are currently viewing தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு 5 பொது அமைப்புகள் வெளிப்படையிலான ஆதரவு!!

https://www.facebook.com/335638133125791/posts/3191798490843060/

காலத்தின் தேவை கருதி தமிழ்மக்களின் நலன் கருதி தாயகத்திலுள்ள 5 பொது அமைப்புகள் வெளிப்படையான ஆதரவை பத்திரிகையாளர் சந்திப்பினூடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மையில் மக்களுக்காக நேர்மையாக பணியாற்றும் அமைப்புகள் மதில்மேல் பூனையாக அல்லாமல் வெளிப்படையான நேர்மையான கருத்துக்களை பதிவுசெய்வது அவசியமாகின்றது.

அதன் அடிப்படையில் இந்த 5 அமைப்புகளின் தெளிவான முடிவும் இலக்கும் பாராட்டுதலுக்குரியது.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அகிய அமைப்புக்களே ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள