துன்னாலையில் விபத்து இளைஞர்கள் உயிரிழப்பு.

You are currently viewing துன்னாலையில் விபத்து இளைஞர்கள் உயிரிழப்பு.

யாழ்.வடமராட்சி துன்னாலை கோவில் சந்தை பகுதியில் உந்துருளி ஒன்று வேகக் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்துடன் மோதிக் கொண்டதில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம்  இன்று ஞாயிற்றுக்கிழமை,
(20.08.2023)  அதிகாலை -1.20,மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்-நிசாந்தன்(அகவை-28) மற்றும் மன்னாரைச் சேர்ந்த செல்வநாயகம்-வின்சன் (அகவை-34)எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி வளைவில் வேகமாகச் செலுத்தப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டை மீறிய உந்துருளி மின்கம்பத்துடன் பக்க வாட்டாக மோதுண்டு  அதன்
அருகான சாலைப் பால மதகுக்குள்
பாய்ந்து
பலமாக மோதியுள்ளமை அருகிருந்த, cc.tv,கமரா காணொளி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துன்னாலையில் விபத்து இளைஞர்கள் உயிரிழப்பு. 1

துன்னாலையில் விபத்து இளைஞர்கள் உயிரிழப்பு. 2

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments