நோர்வேயில் பல பெண்களை கற்பழித்த காவல்துறை அதிகாரி!

You are currently viewing நோர்வேயில் பல பெண்களை கற்பழித்த காவல்துறை அதிகாரி!

Nordland  மாவட்டத்தினை சேர்ந்த காவல்த்துறை அதிகாரி ஒருவர்  இரண்டு பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளார். விரிவான குற்றப்பத்திரிகையில் பல குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 அகவையுடை அதிகாரி காவல்துறை பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை   செய்ததோடு 5 பெண்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தியதற்காக தனது வேலையை இழந்ததோடு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்துள்ளது.

ஆனாலும் அவர் தனது குற்றத்தை மறுத்துள்ளபோதும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் இவ்வாண்டு சனவரி மாதம் Nordland நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் எதிரணி வழக்கறிஞர்கள் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டுமென வாதாடி விவாதங்களை முன்வைத்தபோதும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே காவல்துறை  அதிகாரிக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments