பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப் பட்ட தாயக செயற்பாட்டாளர் களுக்குப் பிணை !

You are currently viewing பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப் பட்ட தாயக செயற்பாட்டாளர் களுக்குப் பிணை !

பூவரசங்குளம் சிறீலங்கா காவல்த் துறையினரால் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு

வவுனியா நீதிமன்றில் இன்று (02.10.2023) திங்கட்கிழமை முற்படுத்தப் பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர்கள் மூவரும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தியாகி திலீபன் அவர்களின் 36, ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு
தாயகப் பகுதியில் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி முன்னெடுக்கப் பட்டிருந்தது.

இதன்போது  சிவல் உடையில் நின்ற சிறீலங்கா காவல்த்துறையினரை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களான பிறேம்,கிந்துஜன், கஜந்தன் ஆகியோர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப் பட்ட போதே நீதிமன்று ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல அனுமதி அளித்திருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி க-சுகாஸ் தலைமையில் சட்டத்தரணிகளான மகிந்தன்,கென்சியஸ்,ரிபின்சன்,கௌரிசங்கர்,ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப் பட்ட தாயக செயற்பாட்டாளர் களுக்குப் பிணை ! 1

பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப் பட்ட தாயக செயற்பாட்டாளர் களுக்குப் பிணை ! 2

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments