வயோதிப பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு 10 பவுண் நகைகள் கொள்ளை!

You are currently viewing வயோதிப பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு 10 பவுண் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு – கொம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் புகுந்த நபர், வீட்டில் தனியாக இருந்த வயோதிப பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.கத்தியால் தாக்கப்பட்ட பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொம்மாந்துறை பகுதியில் தனிமையில் இருந்த 67 வயதான வயோதிபப் பெண்ணின் வீட்டுக்கு நேற்றுக் காலை 7.30 மணிக்கு துவிச்சக்கரவண்டியில் தனியாக சென்ற நபர், வயோதிபப் பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 10 பவுண் நகைகளை கொள்ளையடித்து, தனது துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, வயோதிப பெண் சத்தமிட, அங்கு வந்த அயலவர்கள் உடனடியாக பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர் என்பதும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சிறீலங்கா காவற்துறையினர், தடயவியல் பிரிவு சிறீலங்கா காவற்துறையினர் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments