போர் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

You are currently viewing போர் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட  அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,030 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 133,190 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய படையெடுப்பிற்குப் பிறகு ஒரே நாளில் புடினின் படைகளுக்கு இவ்வளவு கொடிய மற்றும் பேரழிவுகரமான அடி கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

டான்பாஸ் நகருக்கு அருகிலுள்ள பாக்முத் பகுதியைச் சுற்றி நடந்த மிருகத்தனமான சண்டை, மரணங்களின் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த இரண்டு நாட்களில் 25 ரஷ்ய டாங்கிகள் அழிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மொத்தம் 3,245 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜனவரியில் மட்டும் 6,500 உக்ரைன் வீரர்களை கொன்றுள்ளதாக ரஷ்ய தரப்பும் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பு வெளியிடும் இறப்பு எண்ணிக்கையானது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறுகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments