மட்டக்களப்பில் கொரோனா தீவிரம் : கிழக்கில் நேற்று 264 பேருக்கு தொற்று!

You are currently viewing மட்டக்களப்பில் கொரோனா தீவிரம் : கிழக்கில் நேற்று 264 பேருக்கு தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 177 பேர், திருகோணமலையில் 66 பேர் மற்றும் அம்பாறையில் 21 பேர் என கிழக்கு மாகணத்தில் நேற்று திங்கட்கிழமை 264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,801 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அம்பாறையில் 3,636 பேருக்கும் திருகோணமலையில் 2,933 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது எனவும்கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments