மருதங்கேணி கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவன் மரணம்!

You are currently viewing மருதங்கேணி கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவன் மரணம்!

மருதங்கேணி கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் நேற்று கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

லண்டனில் இருந்து உறவினரின் மரண சடங்கிற்கு வந்திருந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments