யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் அநியாயச் சாவு !

You are currently viewing யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் அநியாயச் சாவு !

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த ஓட்டுமடம் பகுதியில்  மீற்றர் வட்டிக்குப் பணத்தை பெற்றவர் பணத்தைச் செலுத்தவில்லை எனத் தெரிவித்து மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர் பணம் பெற்றவரின் வீட்டில் சென்று சண்டித்தனம் செய்து வலுக் கட்டாயமாக வீட்டுப் பொருட்களை ஏற்றிச் சென்றதால் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளான மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்றார் எனத் தெரிவிக்கப்பட்டவரின் இளம் மனைவியும் (மூன்று) பச்சிலம் குழந்தைகளின் தாயுமான பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று  ( 04.09.2023) திங்கட்கிழமை பிற்பகல் நடந்துள்ள இச் சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த ( 34) அகவையுடைய ஜெயராசா-அருள்பாலினி என்ற இளம் தாயாரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை அண்மைய நாட்களாக தமிழர் தாயக பகுதிகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்போர் தொடர்பிலும் அவர்களுடைய அடாவடித்தனங்கள் குறித்த செய்திகளும் சமூக ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில்

யாழ்ப்பாணம், வவுனியா, போன்ற இடங்களில் இச்செயற்பாடு அதிகமாக காணப்படுவதோடு அடாவடித்தனங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றமை தொடர்பிலும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்றுள்ள இந்தத் தற்கொலை சம்பவம் குறித்த செய்தியானது மக்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments