யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அடித்துக்கொலை!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அடித்துக்கொலை!

55 வயதுடைய கணவனை பிரிந்து ஒரு பெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தடயவியல் சிறீலங்கா காவற்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments