மூதூரில் ஒருவர் அடித்துக் கொலை!

You are currently viewing மூதூரில் ஒருவர் அடித்துக் கொலை!

திருகோணமலை, மூதூர் – புளியடிச்சோலைகிராமத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாகவும் இதனால் படுகாயத்துக்குள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வன்முறைச் சம்பவம் நேற்று மதியமளவில் கிராமத்தின் வீதியில் இடம்பெற்றுள்ளது . மேலதிக விசாரணைகளை மூதூர் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments