வடக்கில் எகிறும் கொரோனா!

You are currently viewing வடக்கில் எகிறும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் பனை உற்பத்தி பொருள் வியாபாரிகள். மூவர் மரக்கறி வியாபாரிகள்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் காரைநகர் பேருந்து சாலை பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.நகர் 2ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள