வெடிபொருள் வைத்திருந்த ஈழத் தமிழர்கள் ஐவருக்கு சிறை தண்டனை!

You are currently viewing வெடிபொருள் வைத்திருந்த ஈழத் தமிழர்கள் ஐவருக்கு சிறை தண்டனை!

சென்னை பூக்கடை, பெரியமேடு அருகே ஈழத் தமிழர்கள் வெடிகுண்டுகள் செய்ய தேவையான பொருட்களை வெளி மாநிலத்தில் இருந்து வரவழைத்து அங்கிருந்து இலங்கைக்கு எடுத்து செல்ல வைத்திருந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு கியூ பிரிவு காவல்துறையினர் ஈழத்தமிழர்கள் சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து, கருணாகரன் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் சிவகரன், முத்து ஆகிய 2 பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், வேலுசாமி, கிரிதரன், கருணாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் 3 பேர் தலைமறைவாகவும், 4 பேர் மீது பிடிவாரண்டும், ஒருவர் இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments